tamilnadu

img

ஐஏஎஸ் அதிகாரியை உயிருடன் புதைத்து விடுவதாக பாஜக எம்.பி மிரட்டல்

மத்தியப் பிரதேசத்தின் பாஜக எம்.பி ஒருவர், மாநகராட்சி ஆணையராகப் பணிபுரியும், ஐஏஎஸ் அதிகாரியை அடக்கம் செய்துவிடுவதாக பொதுக்கூட்டத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மக்களவைத் தொகுதி எம்.பி ஜனார்த்தன் மிஸ்ரா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றில் பேசுகையில், 'மாநகராட்சி ஆணையர் சஜ்ஜித் யாதவ், சட்டவிரோத காலனிகளில் வசிக்கும் மக்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதாகவும், இனி மாநகராட்சி ஆணையர் வந்து மக்களிடம் பணம் கேட்டால், தன்னை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கும்படி கூறினார். மேலும், இது போன்ற தகவல் தனக்கு வந்தால், அவரே நேரில் வந்து குழிதோண்டி, மாநகராட்சி ஆணையரை உயிரோடு புதைத்து விடுவதாகவும், ஒருவேளை, தான் சரியான நேரத்திற்கு அங்கு வரமுடியாவிட்டால், மக்களே அதைச் செய்ய வேண்டும் என்றும், அவர் வருவதற்கு முன்பு வேறு யாராவது ஆணையரை உயிருடன் அடக்கம் செய்தாலும், அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் பேசியுள்ளார்.

மேலும், ”ஆணையரை புதைத்த இடத்தில் ஜனார்த்தன் மிஸ்ராவின் பெயர் தாங்கிய பலகையை நிறுவ வேண்டும், ஏனெனில் ரேவா ஆணையரை உயிருடன் புதைத்த எம்.பி. என்று நாடு என்னை அங்கீகரிக்கும்'' என்று ஜனார்த்தன் மிஸ்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 

;